உன்னை பற்றி எழுதலாம் என்று பேனா எடுத்தேன்
அது வாசனை திரவியம் போட்டு கொண்டது !!!!!
முள்ளோ தன் ரத்தத்தை காதல் பரிசாக கொடுத்தது !!!!!!
பசியோடு இருந்த பேனாவோ நிறுத்தாமல் எழுதி கொண்டீருக்கிறது !!!!!
தமிழ் எழுத்துக்களோ பொட்டு வைத்து வளையல் சூடி
உன்னோடு போட்டி போட்டது !!!!!
துணைகாலோ உன்னோடு துணையாய் இருக்குறேன் என்று
கர்வபட்டுகொண்டிருக்குது !!!
பேப்பர் ரோ உன்னை தாங்குவது போல்
இறுமாப்புடன் இருக்கிறது !!!!!
அனைவரிடமும் உரக்க சொன்னேன்
அவள் என் காதலி என்று !!!!!!!!!!!
3 comments:
ஆஹா கவிதைகளா...
இந்தக் காதலி அதாவது உங்கள் காதலிபற்றிய கவிதை
ரொம்ப நல்லாயிருக்குங்க...
தொடர்ந்து கலக்குங்க...
ஒரு சில திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைத்தால்
பார்வையாளர்கள் நிறைய வருவார்களே...!!!
கவிதை நல்லா இருக்குங்க.. தொடருங்கள்..:-))
@ Nizam
Rasithu eluthanarikku nanri and welcome.
@ Ananthi
Thanks for your comments.
Post a Comment