Monday, November 1, 2010

என்ன தவம் செய்தேன்

சூரியன் பற்பசைக்கு விளம்பரம்
செய்து கொண்டீருக்கும் வேளை !!!
நீ தந்து போன முத்தத்தை கவர்ந்து
விடுவனோ? என்று பதறி எழுந்தேன்   !!!

அருகில் நீ வைத்துபோன  தேநீர் கோப்பையுடன்
பரிசு !!! நினெவுலகில் முழுவதும்  நீ
நான் மறந்தேன் என்னை !!!

பெண்மைக்கு இலக்கணம் கொடுத்து
நம்பிக்கைக்கு உன்னை கொடுத்து
தந்தையின் அன்பை பிறழசெய்த தாயுமானவனே
என்ன தவம் செய்தேன்
 நான் உன்னை பெற !!!!!


ஆத்மா கலந்து
மௌனம் பிறந்து
கண்களால் உன்னுடன் பேசிய
ஒவ்வொரு வினாடியும் தேவ வினாடிகள்
என்ன தவம் செய்தேன்
நான் உன்னை பெற !!!!!

மார் இடைவளியிலில்லை
மன சிகரத்தில் உள்ளது
என பெண்டிர் படித்த தாசன் நீயே
என்ன தவம் செய்தேன்
நான் உன்னை பெற !!!!!

என்னக்காக நீ எழுதிய முதல் கவிதை
" போதிமரத்தடி உன் மடி
பற்றற்றேன் உலகத்தில் உன்னை தவிர "
பதிந்துபோனது  என் இதயத்தில் மச்சமாய் !!!

தவிப்பை உன்  தோழனாக்கி
என்னுடன் சண்டையிடும் அவனை
சமாதானம் செய்யும் அழகே
ஓர் இனிப்பு !!!!

என் மர்பாலில் சுவைஇல்லைஎன்று
பின்பு அமிர்தமும் சுவையற்றது
உவமை கூறினையே என்னுள்
பிறக்காதே குழந்தை நீ !!!!

ஸ்பரிசங்களால் வெப்பமுற்று
வெப்பம் தன்மையிழக்க
அணைத்துகொண்டு
என்னை முழுமையாக்கினாய் !!!!

உன் பரந்த மார்பு
என் படுக்கை அறையானது
தினமும் !!!!

கருமேகத்தில் கருவிற்றியருக்கும் மழைபோல
என் கார்கூந்தைலில் புதைந்துள்ள
உன்னை காற்றை போல
தலைகோதி கலைத்திடமட்டேன் !!!!

கண்ணிர் துளியும் என்னுள்
அயர்ந்து தூங்கிவிட்டது
உன்னுடன் வாழும் இந்த
இன்ப தாலாட்டை கேட்டு !!!!

வெறுமையை முழுமையாக்கிய
உன்னை மறுமையிலும் பெற
என்ன தவம் செய்ய நான் ?