Tuesday, April 26, 2011

" தல" பிறந்தநாள் வாழ்த்து



அடையாளங்களை தேடி அலையும் உலகில்
தன் அடையாளத்தை துறந்தவனே!!!

தன்மன வலிமையால் விதியும்  உன்னிடம்
தோற்கச் செய்தவனே  !!!

மனதிலும் உடம்பிலும் காயம்தான் ஆனால்
எல்லோர் உள்ளம் மகிழ செய்பவனே  !!!

பிரசவத்தின் வலியை குழந்தையின் அழுகையில்
மறக்கும் அன்னைபோல் !! உன் உடலின் வலியை
எங்களின் சந்தோஷத்தில் மறந்தவனே!!!

நெற்றிக்கண் திறந்தாலும் தன் மனதில் உள்ளதை
உண்மை நிலையை சபைதனிலே  சொல்ல தயங்காதவன்  !!!

தொடர் தோல்வியென்று   எதிரிகள் சிரித்தார்கள்
உலகம் முழுதும் மக்களின் மனதை
வெற்றி கொண்டதை அறியாமல் !!!

காதிலில் அவன் கட்டியதோர் கோட்டை
இன்றும் எவர் நினைத்தாலும் அழிக்க முடியாது 
அவனின் அன்பு கோட்டை !!!

வெற்றி ஆழிச்சுழியில் புதையாமல்
தோல்வியென்ற நங்கூரத்தால்
மக்கள்யெனும் தோணியில்
உழைப்பென்ற துடுப்பால்
தரணி ஆளும் "தல"(லை)வன் !!!

திருக்குறள் :

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.






Sunday, February 6, 2011

காதல் பாஷை

சகியே ! நீயில்லாத நிமிடங்களில்
பிரபஞ்சமும் விதவைபோல்
வெள்ளையாய் வெறுமையாய் தெரியுதே !!!

உள்ளாடைகளால் அந்நியப்பட்ட
சேலைப்போல் பிரபஞ்சத்தில்
ஒட்டாமல் நான் !!!

உன் புகைபடத்துநுடையே
களிதுருந்தேன் இரவெல்லாம் ஆம் !
ரப்பரில் மகிழ்ச்சியுறும் குழந்தைப்போல !!!

சூரியனை  விழுங்கும் சந்திரன் போல்
 சகியே ! எப்பொழுது நம்  பானிகிரகணம் !!!

 ஜாதகத்தில் சுக்கிரன் ஐயிந்தாவது
 கட்டத்தில் வந்துவிட்டதாம் , நான்
 உன் வட்டத்தில் சுழல்வதை அறியாத ஜோசியர் !!!

  ரத்த தானம் செய்ய மறுத்தேன்
 ஆம்  !  குருதியில் சுருதியாய்
 கலந்துவிட்ட உன்னை இழக்க மனமில்லாமல் !!!

 ஆளில்லாத சாலையில்
வண்டியிலுருந்து  இடறினேன்
அப்பா கோபம்கொள்ள !
அம்மா அணைத்துக்கொள்ள !
வலியோடு நகைத்தேன் நாளை
நீ இடும் கையெழுத்துக்காக !!!

சகியே ! இந்நேரம் பூலோகமே
உன்னிடம் மண்டியிற்றுக்கும் என்
காதலை நீ கற்றுணர !!!

போதும் தனிகையே !  சொல் குலியே !
பொங்கி நிற்கும் கண்ணீரா ?
பாரமாய் வர துடிக்கும் கவிதையா ?
உதட்டோரம் எனக்காக காத்திருக்கும் சிறுநகையா ?
நிலம் பார்க்கும் உன் விழிகளா ?
உன் காதல் இதில் எந்த பாஷை ? !!!