Monday, October 4, 2010

பொறாமை

நேற்று பெய்த மழை
சாலையோரம் குட்டி ஓடைகள்
என்னவள் தாவி தாவி கடந்தாள் ஓடையை
என்னவளின் கொலுசு சத்தத்தால்
ஓடையின் நித்திரை கலைந்தது !!!!!!!
அதனுள் சிறு சலனம் வரி வரியாய்
விழித்த ஓடை பொறாமையுடன் கொலுசுவிடம்
சொன்னது நீ அதிர்டசாலி  !!!
அவளின் கால்களை தொட்டுகொண்டிருக்கிறாய் எப்பொழுதும் !!!
அப்பொழுதுதான் கொலுசுவிர்க்கு புரிந்தது தான்
துருபிடிப்பது எதற்கு என்று !!!!!!!

4 comments:

எஸ்.கே said...

ரசிக்க வைக்கும் கவிதை! வாழ்த்துக்கள்!

பனித்துளி சங்கர் said...

அருமை ரசனை வார்த்தைகளில் கசிகிறது . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன் . பகிர்வுக்கு நன்றி

பனித்துளி சங்கர் said...

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

Thanglish Payan said...

@ panithuli sankar

Thanks for your concern and comments.

i have removed the word verification.
Thanks

@ S.K

Thanks for your comments.