Tuesday, April 26, 2011

" தல" பிறந்தநாள் வாழ்த்து



அடையாளங்களை தேடி அலையும் உலகில்
தன் அடையாளத்தை துறந்தவனே!!!

தன்மன வலிமையால் விதியும்  உன்னிடம்
தோற்கச் செய்தவனே  !!!

மனதிலும் உடம்பிலும் காயம்தான் ஆனால்
எல்லோர் உள்ளம் மகிழ செய்பவனே  !!!

பிரசவத்தின் வலியை குழந்தையின் அழுகையில்
மறக்கும் அன்னைபோல் !! உன் உடலின் வலியை
எங்களின் சந்தோஷத்தில் மறந்தவனே!!!

நெற்றிக்கண் திறந்தாலும் தன் மனதில் உள்ளதை
உண்மை நிலையை சபைதனிலே  சொல்ல தயங்காதவன்  !!!

தொடர் தோல்வியென்று   எதிரிகள் சிரித்தார்கள்
உலகம் முழுதும் மக்களின் மனதை
வெற்றி கொண்டதை அறியாமல் !!!

காதிலில் அவன் கட்டியதோர் கோட்டை
இன்றும் எவர் நினைத்தாலும் அழிக்க முடியாது 
அவனின் அன்பு கோட்டை !!!

வெற்றி ஆழிச்சுழியில் புதையாமல்
தோல்வியென்ற நங்கூரத்தால்
மக்கள்யெனும் தோணியில்
உழைப்பென்ற துடுப்பால்
தரணி ஆளும் "தல"(லை)வன் !!!

திருக்குறள் :

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.






No comments: